இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வெளியான அறிவிப்பு

இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு (South Africa) தெற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்னாப்ரிக்கா - கேப் டவுன் நகரத்தில் இருந்து 2,500 கி.மீ. தொலைவில் கடலின் ஆழத்தில் இன்று (10.7.202) இந்நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் (india) ஆங்காங்கே சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது, மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி பகுதியில் இன்று காலை 7.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.