34 வருடங்களின் பின் ஆரம்பித்த அஞ்சல் அலுவலகம்...! யாழில் எங்கு உள்ளது தெரியுமா?

யாழ்ப்பாணம் (Jaffna) - காங்கேசன்துறையில் சுமார் 34 வருடங்களின் அஞ்சல் அலுவலகம் பின் மீண்டும்  இயங்க ஆரம்பித்துள்ளது.

அஞ்சல் அலுவலகம் மீண்டும் இயங்க கட்டட வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால் அதற்கு பாரிய நிதிச் செலவு காணப்படுகிறது.

இதன் காரணமாக குறித்த அஞ்சல் அலுவலகம் தனியார் கட்டடம் ஒன்றினை வாடகைக்கு எடுத்து தனது சேவையை தொடங்கியுள்ளது.

யுத்தத்தின் காரணமாக 1990 ஆம் ஆண்டளவில் காங்கேசன் துறை (Kankesanturai) பகுதியிலிருந்து மக்கள் வெளியேறியபோது, அங்கு இயங்கி வந்த காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகமும் இடம் மாறி இருந்தது.

அதி உயர் பாதுகாப்பு வலயமாக காங்கேசன்துறை இருப்பதால் தற்காலிகமாக மாவிட்டபுரம் பகுதியில் அஞ்சல் அலுவகலகம் இயங்கி வந்தது.

இந்நிலையில், தற்சமயம் மீண்டும் காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகம் தனது சேவை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.