திருத்தந்தை பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!

திருத்தந்தை பிரான்சிஸ் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு சுவாசத்தொகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன.86 வயதான திருத்தந்தைக்கு கடந்த சில தினங்களாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டிருந்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பரிசுத்த பாப்பரசருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.திருத்தந்தையை சில நாட்களுக்கு வைத்தியசாலையில் வைத்திருந்து முறையான சிகிச்சைகளும் பயிற்சிகளும் வழங்க வேண்டியுள்ளதாக வத்திக்கான் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் மாத இறுதியில் ஹங்கேரிக்கு விஜயம் மேற்கொள்வதற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் திட்டமிட்டிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.