ஐந்து இலட்சம் பவுண்டுகள் பெறுமதியான போலி கால்பந்து உலகக்கிண்ண ரீ-சட்டுகள் பறிமுதல்!


ஐந்து இலட்சம் பவுண்டுகள் பெறுமதியான போலி கால்பந்து உலகக்கிண்ண ரீ-சட்டுகள் பறிமுதல்!


ஐந்து இலட்சம் பவுண்டுகள் பெறுமதியான போலி, கால்பந்து உலகக்கிண்ண ரீ-சட்டுகளை லண்டன் நகரப் படையில் உள்ள பொலிஸ்துறை அறிவுசார் சொத்து குற்றப் பிரிவு, பறிமுதல் செய்துள்ளது.

வடமேற்கு பொலிஸ்துறை அறிவுசார் சொத்து பிரிவின் உதவியுடன் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

லீட்ஸ், ஷெஃபீல்ட், பிரிஸ்டல் மற்றும் நார்தாம்ப்டன் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மொத்தம், நான்கு டன் இங்கிலாந்து ஜெர்சிகள் மற்றும் ஃபிஃபா உலகக் கிண்ண பேட்ஜ்கள், 12,000 பவுண்டுகள் பணத்துடன் கைப்பற்றப்பட்டன.

உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக லாபம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்ட குற்றவாளிகளை குறிவைக்கும் சோதனை நடவடிக்கையாக இது அமைந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கிட்டில் தவறான இங்கிலாந்து ஹோம் மற்றும் அவே ஷர்ட்கள் அடங்கும், அதிகாரப்பூர்வ நைக் பதிப்புகள் ஒவ்வொன்றும் சுமார் 60 பவுண்டுக்கு ஆன்லைனில் விற்கப்படுகின்றன.

ஆனால், சில ஆதரவாளர்கள் வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் போது பணத்தைச் சேமிக்க இதுபோன்ற ரீ-சட்டுகளை கொள்வனவு செய்ய சிலர் ஆசைப்படலாம் என தெரிவித்துள்ளனர்.