வீட்டின் வேலியினை முற்றாக எரித்த விஷமிகள் - யாழில் சம்பவம்


புங்குடுதீவு J/26 கிராமைசேவையாளர் பிரிவிற்குட்பட்ட மணியாரம் தோட்டம் வீதீயில் அமைந்துள்ள செல்லா என்பவரின் வீட்டின் வேலியினை விஷமிகள் சிலர் தீட்டு எரித்துள்ளனர்.

இந்த சம்பவமானது நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அயலவர்களுக்கு இடையிலான முறுகல் நிலை காரணமாகவே இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புங்குடுதீவு குறிகட்டுவான் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியதுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்

அத்துடன் கிராம சேவையாளருக்கு தெரியப்படுத்தியும் இதுவரை பார்வையிட வரவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கிராம மக்கள் குறித்த கிராமசேவையாளர் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளனர்.