யாழில் தனியார் கல்வி நிறுவனம் அருகே கைதான இளைஞன் : வெளியான காரணம்

யாழ்ப்பாண நகரில் இன்று (11) பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு குறித்த சந்தேக நபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட போது யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு  பின்னர் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றதடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றின் அருகிலேயே 33 வயதான குறித்த சந்தேக நபர் மாவா போதைப் பொருளை விற்பனைக்காக வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.

இதன்போது 3 கிலோ 686 கிராம் நிறை கொண்ட மாவா போதைப் பொருள் சிறிய சிறிய பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக குறிப்பிட்டனர்.

குறித்த சந்தேக நபர் விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.