நாட்டில் இன்றும் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி!

நாட்டில் இன்றும்(வியாழக்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களுக்கும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இதனிடையே P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய பிரிவுகளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணித்தியால மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.