அடுக்குமாடிக் கூரையில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தை பாதுகாப்பாக மீட்ட மக்கள்!



சென்னை - ஆவடியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றிலிருந்து தவறி வீழ்ந்த 8 மாத குழந்தையை பாதுகாப்பாக மீட்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

குடியிருப்பின் 4ஆவது மாடியில் உணவூட்டிக்கொண்டிருந்த தாயின் கையிலிருந்து தவறி வீழ்ந்த குழந்தை, 2ஆம் மாடியில் அமைக்கப்பட்டிருந்த கூரையில் வீழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.