கடன் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை : ஜனாதிபதி ரணில்



உள்நாட்டுக் கடன் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை - மாகம் ருஹுனு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (03.07.2023) நடைபெற்ற 'அமரவிரு அபிமான் 32' அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பொய்யான வாதங்களை முன்வைத்து தோல்வியடைவதை விடுத்து, எதிர்க்கட்சித் தலைவரும், குழுவினரும் அரசாங்கத்துடன் இணைந்து நாட்டின் பிரச்சினைகளுக்கு இப்போதே தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான தனது பொறுப்புக்களை நிறைவேற்றி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.