கொழும்பு - அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து உடைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன் வாகனத்தின் மீதும் தீ வைக்க முற்பட்டுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் நிலைமை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
என்ற போதும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.
மேலும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் இருவரை பிடித்த நிலையில் அதில் ஒருவர் தப்பியோடியுள்ளதாகவும் தெரியவருகிறது.