யாழில் பாரிய விபத்து - சம்பவ இடத்திலையே இருவர் உயிரிழப்பு..!



யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் இரண்டு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த , யாழ். போதனா வைத்திய சாலை தாதிய உத்தியோகஸ்தரான மகேஸ்வரன் மயூரன் ( வயது 37) மற்றும் அவருடன் பயணித்த வாகனங்கள் பழுது பார்க்கும் (மெக்கானிக்) அராலி மத்தியை சேர்ந்த ஜெயசுந்தரம் சரோஜன் (வயது 29) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.