யாழில் புகைப்போட முற்பட்டவர் உயிரிழப்பு


யாழில் நுளம்பு பரவுவதைத் கட்டுப்படுத்த புகை போட்ட நபரொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியை 75 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 19ஆம் திகதி நுளம்புக்கு புகைப்போட, புகை சட்டிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது எதிர்பாராத விதமாக தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையிலேயே நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.