ஒன்றரை வயது குழந்தை திடீர் மரணம்! யாழில் துயரம்

யாழ்ப்பாணம் (Jaffna) - சுன்னாகம் பகுதியில் ஒரு வயது 8 மாதம் நிரம்பிய பெண்குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது.

ஐயனார் வீதி சுன்னாகத்தில் வசிக்கும் சசிதரன் தெனியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், திடீர் சுகவீனம் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு (Base Hospital Thellippalai) கொண்டு சென்ற வேளை குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை

குழந்தையின் இறப்பிற்கான காரணம் தெரியாத நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.