விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கான விசேட அறிவித்தல்

விமான நிலையத்திலிருந்து 5 கிலோமீற்றர் தூரத்திற்குள் பட்டம் பறக்கவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்புக் கருதியே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தெரிவித்துள்ளது.

"இதனால் சிறிலங்காவிலுள்ள எந்தவொரு விமான நிலையத்திலிருந்தும் 5 கிலோமீற்றர் தொலைவிற்கு பட்டம் பறக்கவிடுவதற்கு அனுமதி இல்லை என்பது பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது" என்று சிறிலங்காவின் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தெரிவித்துள்ளது.