மறு அறிவிப்பு வரும் வரை தமது குடிமக்கள் யாரும் ஈராக்கிற்குச் செல்ல வேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை!

மறு அறிவிப்பு வரும் வரை தமது குடிமக்கள் யாரும் ஈராக்கிற்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.அத்துடன் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்  உருவாகியுள்ளதைத்  தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியதையடுத்து, ஈராக் உள்ளிட்ட பிராந்திய நாடுகளில் அமெரிக்க வீரர்கள் தாக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.