களுத்துறை பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்குள் இரவு வேளைகளில் புகுந்து பொருட்களைத் திருடும் நபரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் களுத்துறை பிரதேசத்தில் பல வீடுகளின் பொருட்களை திருடியுள்ளார்.
இவர் வீடுகளுக்குள் நுழைந்து நிர்வாணமாக சுற்றித்திரியும் காட்சி அங்கிருந்த கண்கானிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் களுத்துறை தெற்கு மற்றும் வடக்கு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.