பேரழிவால் பாதிக்கப்பட்ட டோங்காவிற்கு நிவாரணப் பொருட்களை அனுப்பும் நியூஸிலாந்து!

பேரழிவால் பாதிக்கப்பட்ட டோங்காவிற்கு நிவாரணப் பொருட்களை அனுப்பவுள்ளதாக நியூஸிலாந்து தெரிவித்துள்ளது.தலைநகரின் முக்கிய விமான நிலைய ஓடுபாதையில் உள்ள சாம்பல் நிவாரண விமானங்கள் தரையிறங்குவதைத் தடுப்பதால், நிவாரணப் பொருட்களை இராணுவக் கப்பல்கள் மூலம் அனுப்ப நியூஸிலாந்து திட்டமிட்டுள்ளது.ஆனால், இராணுவக் கப்பல்கள் தீவுகளை அடைய சில நாட்கள் ஆகும் என்று நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.சனிக்கிழமையன்று ஏற்பட்ட பாரிய எரிமலை வெடிப்பிற்குப் பின்னர் டோங்காவில் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.