பௌத்த தேரர்களை குறிவைத்து புதிய திட்டம்! புலம்பெயர் சமூகம் நிதி வழங்குவதாக குற்றச்சாட்டு




பௌத்த மதகுருமாரின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த திட்டமிட்ட முயற்சிகள் இடம்பெறுகின்றன.புலம்பெயர் சமூகம் இதற்கு நிதி வழங்குகின்றது என பகியங்கல ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச உள்நாட்டு சூழ்நிலைகள் வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கின்ற நிலையில் பௌத்த மதகுருமாரும் பலவீனமான நிலையில் உள்ளனர். அவர்கள் குற்றச்செயல்களிற்கு பலியாகலாம்.

தற்போதைய பொருளாதார சமூக சூழ்நிலைகளில் பௌத்த மதகுருமார் ஒருவரிடமிருந்து நூறு சதவீதம் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது சரியான மனோநிலையில்லை.

ஆகவே இந்த நாட்டின் பௌத்த மதகுருமாரும் மக்களும் சரியான பாதையை பின்பற்ற வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

பௌத்த மதகுருமார் என்ற அடிப்படையில் நாங்கள் வீடியோக்களில் காணப்படும் சம்பவங்களை ஏற்றுக்கொள்வதில்லை என கூறியுள்ளார்.