இந்தியாவில் மேலும் பலருக்கு புதிதாக தொற்று உறுதி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37379 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் புதிதாக 124 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்நிலையில் 11007 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.அந்தவகையில் 171830 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.