இலங்கை பிரதிநிதிகளுக்கும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் காப்புறுதி உரிமையாளர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தை வெற்றி என தகவல்


இலங்கைப் பிரதிநிதிகளுக்கும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின்  காப்புறுதி உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும்  சிதைவுகளை அகற்றும் பணியை நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் வலியுறுத்திய நிலையில் இதற்கும் காப்புறுதி உரிமையாளர் தரப்பில் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இது தொடர்பில் மேலும் கலந்துரையாட அவர்கள் உடன்பாடு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேநேரம் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கோரி இலங்கை அரசாங்கம், சிங்கப்பூரில் ஏற்கனவே ஆரம்பித்துள்ள சட்ட நடவடிக்கைகளுக்கு, இந்தப் பேச்சுக்கள் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர்கள்  உறுதியளித்துள்ளனர்.