வாழ்த்த வந்திருந்த பிரபலங்களுக்கு சிறப்பு பரிசு வழங்கிய நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பத்தியினர்!

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா ஆகியோரின் திருமணம் ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.இவர்களது திருமணத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஓடிடி தளம் ஒன்று ஒளிபரப்பு செய்ய இருப்பதால் திருமணத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ரசிகர்கள், செய்தியாளர்கள் என யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. திருமணத்திற்கு வந்திருந்த பிரபலங்கள் அனைவரும் டிஜிட்டல் அழைப்பிதழ் மூலம் தங்கள் மொபைல் போனில் வைத்திருக்கும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.அதன்பின்னர் வாழ்த்த வந்திருந்த பிரபலங்களுக்கு நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பத்தியினர் சிறப்பு பரிசாக தாம்பூலப்பையில் வெள்ளியிலான குங்குமச்சிமிழும், தங்கச் சங்கிலியும் கொடுத்து அனுப்பியுள்ளனர்.