நயன்தாராவின் புதிய பிஸ்னஸ்

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு பிறகு கனெகட் மற்றும் காட்பாதர், கோல்ட் , ஹிந்தியில் அட்லி இயக்கும் படம் என பிஸியாக இருப்பவர் நயன்தாரா. அதோடு விக்னேஷ் சிவன்னுடன் இணைந்து ரவுடி பிச்சர்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகின்றார். மேலும் சாய் வாலா என்கின்ற டீ நிறுவனத்தின் பங்குதாராரர் ஆகவும் இருக்கும் இவர் கடந்த மாதம் தனது தோழியுடன் இணைந்து டி லிப் பாம் கம்பனி என்கின்ற அழகு சாதன பொருள் தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடக்கி இருக்கிறார். தற்போது துபாயில் ரூபாய் 100 கோடி முதலீட்டில் எண்ணெய்  பிஸ்னஸ் செய்ய நயன்தாரா  முடிவெடுத்திருப்பதாகவும் அதற்கான ஆலோசனை நடத்தவே கடந்த புத்தாண்டு தினத்தின் போது துபாய் சென்று இருந்தார். ஆக நடிகை , தயாரிப்பாளர்  என செயல்பட்டுவரும் நயன்தாரா தற்போது பல  பிஸ்னஸ்களை செய்ய தொடங்கியிருக்கிறார்.