மர்மம்..!காலி முகத்திடல் கடற்கரையில் மற்றுமொரு நபரின் சடலம்!

காலிமுகத்திடல் கடற்கரையில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்கரையிலிருந்து ஆணொருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது எனவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர், சுமார் 40 வயதுடையவர் எனவும் காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, சில நாட்களுக்கு முன்னரும் காலி முகத்திடல் கடற்கரையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.