முல்லைத்தீவில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொதி: காவல்துறையினர் தீவிர விசாரணை

புதுக்குடியிருப்பில் மர்மமான முறையில் இருந்த பொதி ஒன்றினை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர்.

இந்த மர்மபொதியினை நேற்றையதினம்(18) மாலை வேளையில் மீட்டெடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மல்லிகைத்தீவு காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் பொதி ஒன்றினை அடையாளம் தெரியாக நபர் விட்டுச்சென்றுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

 அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த பொதியினை மீட்டுள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட பொதியினுள் துப்பாக்கி ரவைகள் 37 மீட்டெடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பொதி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் மர்ம பொதியினை விட்டுச்சென்ற நபர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கபெறாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.