வௌவால் மூலம் பரவ கூடிய வைரஸினால் அதிக பாதிப்பு!

வௌவால் மூலம் பரவ கூடிய வைரஸினால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.“புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. வௌவால் மூலம் பரவ கூடிய வைரசால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.ஆனால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.  தடுப்பூசியை செலுத்தி பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.