அனா புயல் காரணமாக 75 இற்கும் மேற்பட்டவர்கள் பலி!

தென்கிழக்கு ஆபிரிக்க நாடுகளைத் தாக்கிய அனா புயல் காரணமாக 75 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.வெப்பமண்டல புயலான அனா வீசியதைத் தொடர்ந்து மடகாஸ்கரில் 41 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100000ற்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.அத்துடன் மலாவியில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மற்றுமொரு நாடானா மொசாம்பிக்கில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் 3 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.