அவுஸ்திரேலிய கடற்கரையில் கரையொதுங்கிய 150க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்

அவுஸ்திரேலிய மாநிலமான டாஸ்மேனியாவில் உள்ள கடற்கரை பகுதியில் 150 க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரையொதுங்கிய நிலையில் சிக்கித் தவிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

கடந்த 48 மணி நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் டஜன் கணக்கான டொல்பின்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், இன்று காலை வரையான நிலவரப்படி சுமார் 90 டொல்பின்கள் மாத்திரமே தற்சமயம் உயிருடன் உள்ள நிலையில், அவற்றை காப்பாற்றும் பணிகளில் சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சிக்கித் தவிக்கும் டொல்பின்கள் பொய் கொலைத் திமிங்கலம் என நம்பப்படுகிறது,

டாஸ்மேனியாவின் இந்தப் பகுதியில் 50 ஆண்டுகளில் இது போன்ற திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது இதுவே முதல் முறையாகும் என அப்பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொய் கொலைத் திமிங்கலங்கள் மிகப்பெரிய டொல்பின் இனங்களில் ஒன்றாகும்.

மேலும் அவை 6.2 மீற்றர் வரை வளரக்கூடியவை என்பதும் குறிப்பிடத்தக்கது.