மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை (புதன்கிழமை) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இதன்போது  உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல் மற்றும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை, அண்டை நாடுகள் வழியாக மீட்கும் பணி நடைபெற்று வருவது குறித்து  ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 17,400 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.