வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்துள்ள இராணுவ அமைச்சகம்!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 351 பொருட்களுக்கு இராணுவ அமைச்சகம் தடை விதித்துள்ளது.இது குறித்து இராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முப்படைகளில் பயன்படுத்தப்படும் 2500க்கும் அதிகமான பொருட்கள் தற்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது.தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் மேலும் 351 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை மூன்று ஆண்டுகளில் முழுமையாக அமுல்படுத்தப்படும்.இந்த பொருட்கள், இந்திய தொழிற்சாலைகளில் இருந்தே கொள்முதல் செய்யப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் அன்னிய செலவானி முவ்வாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மிச்சமாகும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.