கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ள இலட்சக்கணக்கான குழந்தைகள்!

கொரோனா தொற்றால் 147000குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.குறித்த  ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பிரமாணப் பத்திரத்தில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விபரங்களை மாநில அரசுகளும் யூனியன் பிரதேச நிர்வாகங்களும் “பால் ஸ்வராஜ் கொவைட் கோ” என்ற வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி காணொலி வாயிலான கூடத்தினை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.