யாழ்.பல்கலையில் அனுஷ்டிக்கப்பட்ட மலையக தியாகிகளின் நினைவு தினம்

மலையக தியாகிகளின் நினைவு தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொதுத் தூபியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று(10) யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

மலையகத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவைகளையும், உரிமைக்காக போராடி உயிர்நீத்த உறவுகளையும் நினைவு கூர்ந்து இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உரைகள் ஆற்றப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.