ரஷ்யாவுக்கு பாரிய இழப்பு : 60 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு உக்ரேனில் உள்ள பயிற்சி நிலையம் மீது நடத்தப்பட்ட இரண்டு ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 60 ரஷ்ய படையினர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரேஷ்ட தளபதியின் வருகைக்காக டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள தளத்தில் படையினர் கூடியிருந்தவேளை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் வெளியான காணொளி காட்சிகளில் ஏராளமானோர் இறந்திருப்பதைக் காட்டுகிறது.

 ஆனால் இந்த தாக்குதல் வெளிவரும் அறிக்கைகள் "மிகவும் மிகைப்படுத்தப்பட்டவை" என்று ரஷ்ய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவை சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

 புடினுடனான கூட்டத்தில், ஷோய்கு, முன் வரிசையின் பல பகுதிகளில் ரஷ்ய படையினர் பெற்ற வெற்றிகளைக் தெரிவித்தார். மற்றும் அவ்திவ்கா நகரத்தை சமீபத்தில் கைப்பற்றியதைப் பற்றி கருத்து வெளியிட்டார்.

ஆனால் டொனெட்ஸ்க் பகுதி சம்பவம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.


இச்சம்பவத்தில் உயிர் பிழைத்த இராணுவ வீரர் ஒருவர், படையணியின் தளபதிகள் தங்களை திறந்தவெளியில் நிற்க வைத்ததாக தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஹிமார்ஸ் ஏவுகணை அமைப்பில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளால் அவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


எனினும் இந்த தாக்குதல் தொடர்பில் உக்ரேனிய அதிகாரிகளிடமிருந்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.