கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் - காவல்துறை குவிப்பு ; தொடரும் பதற்றம்!



களனி பல்கலைக்கழக மாணவர்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

மாணவ சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான கெழும் மற்றும் டில்ஷான் ஆகியோரை உடனடியாக விடுவிக்குமாறு கோரி குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

களனி பல்கலைக்கழக பகுதியிலிருந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உருவப் பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். 

பதற்றமான சூழ்நிலை நீடிப்பதால் குறித்த பகுதியில் பெரும் திரளான காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.