யாழ்.உடுப்பிட்டியில் மைத்திரி பங்கேற்ற கூட்டத்தில் காலாவதியான குளிர்பானங்கள் கண்டுபிடிப்பு

 


யாழ்.உடுப்பிட்டி - மகளீர் கல்லூரியில் மைத்திரிபால சிறிசேனா கலந்துகொண்டிருந்த நிகழ்வுக்காக கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் காலாவதியானமை பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடுப்பிட்டி - மகளிர் கல்லூரியில் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கான நிதி உதவி வழங்கியமையை ஒட்டிய நிகழ்வில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டுள்ளார்.

இந்தநிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட தேனீர் விருந்துக்காக உடுப்பிட்டியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் 4 குளிர்பான போத்தல்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதனை பாதுகாப்பு பிரிவினர் பரிசோதித்தபோது அது காலாவதியானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு சுகாதார பிரிவு என்ன நடவடிக்கை மேற்கொள்ளும்?? என்ற கேள்வி எழுந்துள்ளது.