தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி

வடக்கு - கிழக்கு தமிழர் தாயக பகுதியில் உள்ள மக்கள், உரிமை கோரிய யுத்தத்தில் தன்னுயிர் ஈந்த மாவீரர்களை நினைவுகூறும் வகையில் இன்று மாவீரர் தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர். 

பல்வேறு தடைகள் மற்றும் இக்கட்டான நிலைமைகள் காணப்படினும் அதனையும் தாண்டி மாவீரர்களை நினைவேந்த தாயக மக்களும் புலத்தில் வாழும் ஈழத்தமிழர்களும் தயாராகியுள்ளனர்.  

இந்தநிலையில், இன்று காலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில்  அருகில் மலர் தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலிக்கப்பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

இதேவேளை, தாயக பகுதிகளில் உள்ள துயிலுமில்லங்களில் இன்றையதினம் மாலை 6.05  மணிக்கு சுடரேற்றப்பட்டு, மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும்.