கொடிகாமத்தில் மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர் கைது

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் மாவீரர் தினத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர்  இன்றையதினம்(28) கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்றார் என தெரிவித்து இந்த இளைஞர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவர் குறித்த ஆடையை அணிந்து வந்துள்ளார். 

இந்தநிலையில்,  குறித்த நபர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

சந்தேக நபரிடம் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக  தெரிவிக்கப்படுகின்றது.