சந்திராயான்-3 விண்கலத்துக்கு முன்பே லூனா-25 ஐ நிலவில் தரையிறக்க திட்டம்

இந்தியா சந்திராயான்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக விண்ணில் செலுத்தியுள்ளது.

இந்த விண்கலமானது எதிர்வரும் 23-ஆம் திகதி நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திராயான்-3 ஐப் போலவே நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக ரஷ்யா லூனா-25 என்ற விண்கலத்தை உருவாக்கியுள்ளது.

இந்த விண்கலமானது ரொக்கெட் மூலம் இன்று (11) விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்த விண்கலமானது 5 நாட்கள் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும் எனவும், அதனைத் தொடர்ந்து 5 முதல் 7 நாட்கள் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்து நிலவில் தரையிறங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் சந்திராயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷ்யாவின் லூனா-25 விண்கலமும் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக மூன்று இடங்களை ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஷ்யா 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிலவை நோக்கி விண்கலத்தை அனுப்பியுள்ளது, முதன்முதலாக 1976-ம் ஆண்டு நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


2021-ம் ஆண்டே

2021-ம் ஆண்டே லூனா-25 விண்கலத்தை ஏவ ரஷ்யா திட்டமிட்டிருந்த வேளை, பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விண்கலமானது நிலவில் மாதிரிகளை சேகரித்து நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்று ஆய்வு செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அதுமாத்திரமல்லாமல் சந்திராயான்-3 விண்கலத்துக்கு முன்பாகவே லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.