சுமைதூக்கும் தொழிலாளிக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்..! ஒரே இரவில் கோடீஸ்வரர்

சந்தையில் கூலி வேலை பார்த்த வந்த நபர் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

கேரளாவின் மல்லாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் எனும் குறித்த நபர் அங்குள்ள சந்தையில் சுமைதூக்கும் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ரூ.40 கொடுத்து லொட்டரி பற்றுச்சீட்டை வாங்கியிருக்கியுள்ளார்.

அதற்கு ரூ. 3,57,86,502.26 (இலங்கை மதிப்பில்) பரிசு விழுந்துள்ளது.

வேலைக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்த போது லொட்டரிக்கு பரிசு விழுந்ததா என தொலைபேசி மூலம் பார்த்துள்ளார். அப்போது தான் இமாலய பரிசு விழுந்ததை உறுதி செய்து கொண்டார்.

இது குறித்து ராஜேஷ் கூறுகையில், ஏழ்மையில் வாடிய எனக்கு இந்த அதிர்ஷ்டம் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது எதிர்பாராத ஒரு மாபெரும் அதிர்ஷ்டம் என கூறியுள்ளார்.