சுற்றுலாப்பயணியை மிரட்டி லட்சக்கணக்கில் கொள்ளை!


ராகம - நாகொட பிரதேசத்தில் பிரித்தானிய பெண்ணொருவரின் வீட்டிற்குள் இருவர் புகுந்து கொலை மிரட்டல் விடுத்து திருடிய சம்பம் ஒன்று பாரதிவாகியுள்ளது ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 60 வயதுடைய பிரித்தானிய பெண்ணின் வைரம் பதித்த காதணி மற்றும் வைரப் பதக்கத்தை திருடப்பட்டதோடு 3,400 ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டதாக ரத்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி 1,603,400 என ரத்கம காவல்துறையினரிடம் குறித்த பெண் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த பொருட்களை கொள்ளையிட்டு சென்ற சந்தேகநபர்கள் இருவரைப் பற்றிய தகவல்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்ய ரத்கம காவத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.