வெளிநாட்டு மோகத்தை காட்டி லட்சக் கணக்கான பணம் கொள்ளை..!

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த சந்தேக நபர்கள் இருவரை குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 163 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை இருவரும் மோசடி செய்ததாக 7 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இம்புல்கொட மற்றும் ஹல்மில்லவெவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயது மற்றும் 57 வயதுடையவர்களாவர்.

குளியாபிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.