குருநாகலில் 1,000 ஏக்கர் நில ஒப்பந்தத்தில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர் ஒருவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் பாராளுமன்றில் உரையாற்றிய பிரதி அமைச்சர் சுனில் ரணசிங்க மேற்படி விடயத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதி அமைச்சர் சாலிந்த திசாநாயக்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள திசாநாயக்க ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் துணை அமைச்சரால் நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதை பிணையமாகப் பயன்படுத்தி வங்கி ஒன்றிடமிருந்து கடன் பெற்றுள்ளதாகவும் எனினும், கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியுள்ளனர் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி அம்மையார், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள், அதன்பின்னர் 2007 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக இருந்தவர் உள்ளிட்டோர் மாதாந்த குத்தகையைக் குறைத்து பின்னர் அதை இரத்து செய்வதில் ஈடுபட்டதாகவும் பிரதி அமைச்சர் சுனில் ரணசிங்க சபைக்கு தெரிவித்தார்.