இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவு!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் சமீபகாலமாக குறைவடைந்து வருகிறது.அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 3993 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 இலட்சத்து 71 ஆயிரத்தைக் கடந்துள்ளது.இவர்களில் 4 கோடியே 24 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் 49917 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.மேலும் நேற்று மாத்திரம் 255 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 515000 கடந்துள்ளது.