குருந்தூர் மலை விவகாரம் - நீதிபதி நேரில் விஜயம்



தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையினை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

நீதிபதியுடன், சட்டமா அதிபர் திணைக்களத்தினர், பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்கள் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.