நாடு திரும்பினார் ஈழத்து குயில் கில்மிஷா

யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக ஈழத்து குயில் கில்மிஷா தனது குடும்பத்துடன் நாடு திரும்பியுள்ளார்.

இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று (28.12.2023) மதியம் பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். 

இதன்போது பெருமளவானவர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்து கில்மிஷாவை வரவேற்றுள்ளனர்.

இதேவேளை கில்மிஷா விமான நிலையத்தில் இருந்து வரவேற்கப்பட்டு வாகன தொடரணி மூலம் அரியாலை பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அத்துடன் அங்கு அவருக்கு கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.