120ஐ தாண்டிய பலி எண்ணிக்கை! 42 பேரின் உடல்கள் மீட்பு : சோகத்தில் கென்யா


கென்யாவில் அணை உடைந்தது மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 120ஐ தாண்டியுள்ளது.
 
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடும் மழை பெய்ததில், தெற்கு நகரமான மை மஹியுவில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

அங்கு அணை உடைந்ததில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 மீட்புப்பணி குறித்து பொலிஸார் கூறுகையில், ''கிஜாபே பகுதியில் அணை ஒன்று அதன் கரையில் உடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 17 சிறார் உள்ளடக்கிய 42 பேரின் உடல்களை நாங்கள் இதுவரை மீட்டுள்ளோம். மேலும், மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன'' என தெரிவித்துள்ளனர்.
 
இதற்கிடையில், மழையினால் நீர்மின் அணைகள் கொள்ளளவிற்கு நிரம்பியுள்ளன. இது பாரிய கீழ்நிலை உபரிநீர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என அரசாங்க செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.