முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இன்று மதியம் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல , லஞ்ச ஒழிப்பு ஆணையகத்தின் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் அவரும் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் சட்டவிரோதமாக பணம் மாற்றியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்று சந்தேக நபர்களும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதற்கான