பிரபல தென்கொரிய பாடகர் தற்கொலை

பிரபல தென் கொரிய பாடகர் சோய் சுங் - பாய் தற்கொலை செய்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

33 வயதான பிரபல கொரிய பாடகரான இவர், கடந்த 2011ஆம் ஆண்டு கொரியாவின் காட்டேலண்டில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து பிரபலம் அடைந்தார்.

இந்த நிலையில், அவர், நேற்று முன்தினம் காலை 9.41 மணி அளவில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அவர் தனது யூடியூப் சேனலில் பதிவுசெய்யப்பட்ட பதிவாலோ அல்லது அவருக்கு வீட்டில் இருந்த நெருக்கடியான சூழ்நிலைகளாலோ அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் கருதுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையடுத்து, அவர் ஏதோ ஒரு மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

காவல்துறையினர் கைப்பற்றி இருக்கும் அவர் எழுதிய குறிப்பு ஒன்றில், "என் முட்டாள்தனமான தவறால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று எழுதப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.