யாழில் வீடுடைத்து நகை-பணம் திருட்டு

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 3 இலட்சம் ரூபா பணமும் மூன்றரைப் பவுண் நகையும் திருடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (31.07.2023) மாலை கல்வயல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

கணவன் மேசன் வேலைக்குச் சென்றுள்ள நிலையில்,  மனைவி அருகிலுள்ள காணிக்கு ஆடுகளை கட்டி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது 3 இலட்சம் ரூபா பணமும், மூன்றரைப் பவுண் நகையும் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.