ஜெயம் ரவியின் 28 ஆவது படத்தில் நடிக்கும் தன்யா

பலே வெள்ளைத்தேவா, பிருந்தாவனம், கருப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தன்யா ரவிசந்தரன் தற்போது மாயோன், நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களில் நடித்து வருகின்றார். பூலோகம் படத்தை அடுத்து கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும்  28 ஆவது படத்திலும் இவர் தற்போது இணையந்துள்ளார். இதே படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்து வருகின்றார். அவருக்கு இணையான இன்னொரு நாயகியாக நடிக்க தன்யா ரவி ரவிசந்தரன் ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைப்பெற்று வருகின்றது.அடுத்த கட்ட படப்பிடிப்பில்  ஜெயம் ரவி உடன் இணைந்து நடிக்கப்போகிறார்  தன்யா ரவிசந்தரன்.