யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலிருந்து வெளியேறி பரபரப்பை ஏற்படுத்திய சுமந்திரன்


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து அதிபர் சட்டத்தரணியும் தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் வெளியேறியமையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்றைய தினம்(26) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில்,  குறித்த கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் சட்டத்தரணியும் தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் கூட்டத்தில் கலந்து கொண்டதோடு தான் கூட்டத்தில் இடை நடுவே வெளியே செல்ல வேண்டும் என ஏற்கனவே தலைவருக்கு அறிவித்திருந்த போதிலும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவர் வெளியேறியுள்ளார்.

அதேவேளை, அவர் வெளியேறிய போது நக்கலாக கடற்தொழில் அமைச்சர் வெளிநடப்பா அல்லது வெளியே போகிறார்களா என சிரித்தபடி வினவிய போது நான் ஏற்கனவே உங்களிடம் கூறிவிட்டேன் தானே இடைநடுவே போய்விடுவேன் என அதன்படி செல்கின்றேன் என  கூறியுள்ளார் இதன்போது கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.